மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் அம்பியூலன்ஸ் வண்டியொன்று 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட மூவர் காயமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கர்ப்பிணித் தாய் ஒருவரை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு ஸ்டஸ்பி தோட்டத்திற்கு திரும்பும் வழியில் பார்கோ தோட்டத்திற்கு அருகில் அம்பியூலன்ஸ் வண்டி பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
மேற்படி சம்பவத்திற்கு அதிக வேகம் மற்றும் குடி போதை ஆகியன காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் மஸ்கெலிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக