ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பாரிய நிலநடுக்கம்: மத்திய கிழக்கிலும் தாக்கம்!
ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது.
சவுதி, கட்டார், பாரெய்ன், டுபாய் உட்பட மத்திய கிழக்கின் பல பகுதிகளிலும் இது நடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் புதுடெல்லி, ஆப்கானிஸ்தானிலும் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
இதில் சிக்கி ஈரானில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சிச் சேவை ஆரம்பத்தில் அறிவித்ததாக தெரிவித்தபோதிலும், எவ்வித உயிரிழப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என ஈரானிய தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அங்கு தொலைபேசித் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
பாகிஸ்தானிலும் பலர் இந் நிலநடுக்கத்தால் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக