நேற்று திறந்த மார்புப் பெண்ணியப் போராட்டக் குழுவான FEMEN பரிசின் பெரிய பள்ளிவாசல் (Grande Mosquée de Paris) முன்பாக இஸ்லாமியக் கொடியை எரித்துப் போராட்டம் நடாத்தியுள்ளனர். FEMEN போராட்டக் குழுவைச் சேர்ந்த மூன்று பெண்கள் salafiste எனப்படும் இஸ்லாமியமதச் சட்டங்களின் கொடியை எரித்துள்ளனர். இஸ்லாமிய மற்றும் அரபுத் தேசங்களில் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைக் கண்டித்துப் போராடும் ஒரு துனிசியப் போராளிப் பெண்ணுக்கு ஆதரவாகத் தமது போராட்டங்களைகப் பரிசில்
நடத்துகின்றனர்.
நடத்துகின்றனர்.
இவ்வமைப்பைச் சேர்ந்த இரு பிரெஞ்சுப் பெண்ணும் ஒரு துனிசியப் பெண்ணுமே '"chahada",' பொறிக்கப்பட இஸ்லாமிய நம்பிக்கையைத் தொழில் ரீதியாக்கும் கறுப்புக் கொடியினை பெரிய பள்ளிவாசல் முன்பே எரித்தனர். இவர்களின் வழமையான போராட்ட முறையான திறந்து மார்புப் போராட்டத்தில் 'இஸ்லாமியர்களுக்கொதிரான அரபுப் பெண்கள்' , 'பெண்களுக்கான விடுதலை வேண்டும்' மற்றும் ' உங்கள் மனநிலையை மாற்றுங்கள்' போன்ற வாசகங்களை உடலில் பொறித்திருந்தனர். மற்றும் 'தீவிர இஸ்லாமிய மதவாதிகளை எதிர்க்கின்றோம்' எனவும் பொறித்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக