அனுராதபுரத்தில் 90% மக்களுக்கு தாகம் எடுப்பதில்லை?
அனுராதபுரத்தில் 90 சதவீதமான மக்கள் தாகத்தை உணர்வதில்லையென்ற அதிர்ச்சிகர தகவல் ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளது.
அம் மாவட்டத்தில் மக்கள் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்படுகின்றமை அதிகரித்து வருவது தொடர்பில் வைத்தியர்கள் ஆராய்ந்த போது தாகத்தை உணராமை தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் வைத்தியர்களும் தங்களுக்கு தாகம் எடுக்கவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க சுகாதர அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக