செய்திகள்

Mp3 க்கு போட்டோ போடுவதற்கு புதிய வளி .......ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு..........பயணங்களின் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய நவீன சார்ஜர் அறிமுகம்............online மூலம் Facebook Cover Photo உருவாக்க...........Phone Nomber நம்பரை வைத்து Adress ஐ கண்டு பிடிப்பது எப்படி? .........சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற.........

wel come

வியாழன், 9 மே, 2013

அஸாத் சாலியை விடுதலை செய்யக் கோரி அம்பாறையில் ஹர்த்தால்

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியை விடுதலை செய்யக் கோரி அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.


குறிப்பாக கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்துவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. 

இந்த ஹர்த்தால் காரணமாக வர்த்தக நிலையங்கள், கடைகள் எவையும் திறக்கப்படவில்லை. போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை.

இப்பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் கடைகளை திறந்து வைப்பதற்கான தீவிர முயற்சிகளில் இராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக